புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012

நெல்லியடியில் வைத்தியசாலை சென்ற இளம் தாயும் குழந்தையும் மாயம்
நெல்லியடி, வைத்தியசாலைக்குச் சென்ற இளம் தாயும் அவரது ஒரு வயதுப் பெண் குழந்தை யும் கடந்த திங்கட்கிழமை முதல் கா ணா மல் போயுள்ளதாக கணவரால் நெல் லி யடி பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய் யப்பட்டுள்ளது.
கரவெட்டி மத்தியைச் சேர்ந்த கோபிநாத் நித்தியா (வயது 26) அவரது பெண் குழந்தையான றஜீனா (வயது 01) ஆகிய இருவருமே காணாமல் போயு ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது; கரவெட்டி மத்தி மாணிக்கவாசகர் வீதி யைச் சேர்ந்த குறித்த இருவரும் கடந்த திங் கட்கிழமை காலை 9 மணியளவில் பருத் தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முச்சக் கரவண்டியில் சென்றுள்ளனர். இதன் பின் னர் அவர்கள் அன்று வீடு திரும்ப வில்லை.
இதனையடுத்து கணவரால் நெல் லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய் ய ப் பட்டுள்ளது. இதுவரை இவர்கள் தொடர்பான ௭ந்த விதமான தகவல்களும் தெரியவராமையால் கணவனும் அப்பிரதேச மக்களும் அச்சம் கொண்டுள்ளனர்.

ad

ad