புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

தமிழகத் தலைவர்களையும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும்
 தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 
ஐந்து நாள் இந்தியப் பயணத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று ஞாயிற்றுக் கிழமை நாடு திரும்புகின்றனர்.
 
இந்தக் குழுவினர் நாடு திரும்பியதும் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திப்பது தொடர்பில் இறுதிமுடிவு எட்டப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் "உதய'னிடம் தெரிவித்தார்.
 
இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள் முடிவடைந்த நிலையில் தமிழகத் தலைவர்களையும் சந்திப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.
 
நாடு திரும்பியதும் இதுகுறித்து ஏனைய உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்தி அதில் தமிழகத் தலைவர்களை சந்திப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அதன்பின்னர் தமிழகப் பயணம் திட்டமிடப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
 
தமிழகப் பயணத்தின்போது முதல்வர் செல்வி ஜெயலலிதா, கலைஞர் மு.கருணாநிதி உட்பட பல அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad