புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2012


யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கேபிள் இயக்குனர்களுக்கு டக்ளஸ் குழுவினர் அச்சுறுத்தல்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 05-11-12 அன்று யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கேபிள் இயக்குனர்களை அழைத்து யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் தென்பகுதியைச் கேபிள் நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குமாறு அன்புக் கட்டளை இட்டிருக்கின்றார்.
அவ்வாறு குறித்த தென்பகுதியைச் சேர்ந்த கேபிள் நிறுவனத்துடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேபில் இயக்குனர்களை இணைய வைத்து அதன் மூலம் யாழ்ப்பாணத்து கேபில் இயக்குனர்களிடம் பணம் அறவீடு செய்வதுடன் அவர்களின் கேபில் இயக்கும் தொழிலையும் கையகப்படுத்த எத்தனிப்பதாக கேபில் இயக்குனர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
அமைச்சரின் அன்புக் கட்டளையை யாழப்பாணத்து கேபிள் இயக்குனர்கள் கேட்காததையடுத்து இன்று மீள ஸ்ரீதர் தியேட்டருக்கு கேபிள் இயக்குனர்களை அழைத்த யாழ் மாவட்ட ஈ.பி.டி.பியின் மாவட்ட பொறுப்பாளர் கமல் பழைய பாணியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
அடுத்த சனிக்கிழமைக்கு அதாவது 17-11-2012 க்கு முன்னர் குறித்த தென்பகுதி நிறுவனத்துடன் இணையாத யாழ். கேபிள் இயக்குனர்கள் யாழ்ப்பாணத்தில் தொழிலை மேற்கொள்ள முடியாதென அச்சுறுத்தியதாக கேபிள் இயக்குனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தென்பகுதி நிறுவனத்துடன் இணையாத யாழ் கேபிள் இயக்குனர்களுக்கு ஈ.பி.டி.பியின் பழையபாணியில் தண்டனை கொடுக்கப்படுமென ஈ.பி.டி.பியின் மாவட்ட பொறுப்பாளர் கமல எச்சரித்து அனுப்பியுள்ளார்.
மணல் விற்பனை அடங்கலாக பல்வேறு வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் அமைச்சரும் அவரின் அடிவருடிகளும் மீள தமது அடாவடித்தனத்தை ஆரம்பித்துள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ad

ad