புலியூரில் மாவீரர் தின அஞ்சலி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், புலியூரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த 1983 முதல் 1986-ம் ஆண்டு வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. டேராடூனில் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற புலிகளின்
அவ்வாறு கொளத்தூரை அடுத்த கும்பாரப்பட்டியில் அமைக்கப்பட்ட பயிற்சி முகாமில் மூன்று பிரிவுகளில் (பேட்ஜ்) சுமார் 900 போராளிகள் பயிற்சி பெற்று இலங்கை சென்று போரில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கு போராளிகளுக்கு பயிற்சி அளித்த பொன்னம்மான் என்ற தளபதியின் நினைவாக புலியூரில் நினைவு நிழற்குடை ஒன்றை அமைத்துள்ள பொதுமக்கள், ஆண்டுதோறும் ஈழத்தில் உயிரிழந்த போராளிகளுக்காக நவம்பர் 27-ம் தேதி கடைப்பிடிக்கும் மாவீரர் தினத்தன்று, பொன்னம்மான் நினைவு நிழற்குடை அருகில் திரண்டு போராளிகளுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.