புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2012


2வது டெஸ்ட்: தோல்வி முகத்தில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது.

துவக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கிய சேவாக் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வரிசையாக வீழ்ந்தனர்.

புஜாரா 6, சச்சின் 8, கோலி 7, யுவராஜ் சிங் 8, தோனி 6, அஸ்வின் 11 என வரிசையாக விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. ஒரு பக்கத்தில் நிலைத்து நின்று ஆடி, துவக்க ஆட்டக்காரர் கௌதம் காம்பிர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்பஜன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களே எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியை விட 34 ரன் அதிகம் பெற்று இருப்பினும், இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் உள்ளது.

ad

ad