புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2012

2013 ம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஜனநாயகத்தை பலபடுத்தும் நோக்கில் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் 2013 ஆண்டு நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் இனவாதக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய ஆகியன மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பட்டத்தக்கது.

ad

ad