கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24 சனிக்கிழமை பிரான்சில் !
கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வு தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்:
சிறீலங்காவின் கைக்கூலிகளினால் கடந்த 8ந் திகதி பிரான்ஸ் தலைநகர் பரிசில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமை நடைபெறும். 24ம் திகதி சனிக்கிழமை காலை 10மணி முதல் மாலை 4மணிவரை கேணல் பரிதி அவர்களின் வித்துடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகள் முறைப்படி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்ஸ்
தொலைபேசி: 0143581142