புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2012


ஜெயலலிதா -ஷெட்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.



கர்நாடக முதல்வர் ஷெட்டரை தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.


தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் தர மறுத்தது கர்நாடகம்.  ஜெயலலிதா -ஷெட்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இது குறித்து ஜெயலலிதா செய்தியாளர்களிடம்,  ’’கர்நாடகம் தண்ணீர் தந்தால்தான் சம்பா பயிரை காப்பாற்ற முடியும் என்று பேச்சின் போது வலியுறுத்தினேன்.  தண்ணீர் விடாவிட்டால் சம்பா நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளதாக விளக்கினேன்.
குறந்தது 15 நாட்களாவது 30 டி.எம்.சி.  நீர் விட கோரினேன்.  தண்ணீர் தராவிட்டால் சம்பா பயிர் கருகும் நிலையில் உள்ளது என்று விளக்கினேன்.

 மேட்டூர் அணையில் உள்ள நீர் 6 நாள் பாசனத்துக்கே போதுமானது.  தற்போது அணையில் உள்ள 16 டி.எம்.சி.யில் 5 டி.எம்.சி குடிநீர் தேவைக்கானது.  அணையில் உள்ள மீன்கள் வாழ 5 டி.எம்.சி. நீர் இருப்பு வைக்க வேண்டும்.   எஞ்சிய 6 டி.எம்.சி நீரை மட்டுமே பாசனத்துக்கு  பயன்படுத்த முடியும் என்றும் விளக்கினேன்.
உச்சநீதிமன்றம் கூறியதால் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.  கர்நாடகம் மறுத்ததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளேன்.  
கர்நாடக முதல்வர் ஷெட்டருடன் நடத்திய பேச்சு விவரம் சுப்பீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும்’’ என்று கூறினார்.

ad

ad