புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012

ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம்கேட்ட இராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம் இராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர் கேட்டுள்ளதாக கேகாலை மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.


கொழும்பு, கொள்ளுப்பிட்டி, மிஹிந்து மாவத்தையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதியை அங்கு வைத்து படுகொலை செய்ய முடியும் என்றும் குறித்த பெண் மேற்படி மூவரிடம் தெரிவித்திருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜசிங்க கேகாலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரையிலான  காலப்பகுதியில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கேகாலை பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த குண்டு மதனி என்று அழைக்கப்படும் ராசலிங்கம் மதனிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை கேகாலை மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்தேகநபர் 'ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு 7 கோடி ரூபா அதிகம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்லவை படுகொலை செய்வதற்கு 20 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது என்றும் குறித்த சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மேற்படி வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ad

ad