நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா
இந்த கூட்டத்தில், இன்று மாலை கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தின்போது இறுதி முடிவெடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் பல்வேறு மசோதாக்கள் குறித்து பாரதீய ஜனதா கட்சி செயல்பட வேண்டிய வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தேசிய ஜனதாயக கூட்டணியின் விவாதத்துக்கு பிறகு எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து, குளிர்கால கூட்டத்தொடரில் எங்களது வியூகங்கள் அமையும் என்று பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.