புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் மற்றுமொரு ஆணுடன் வைத்து வாகனத்துடன் எரித்து கொலை 
கனடா மொன்றியலில் அனலைதீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டது தற்கொலை அல்ல என கனேடியப் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன்
யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911 அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர். இது ஒரு கொலையா இல்லை தற்கொலையா என்று தெரியாத பொலிசார், இரண்டு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆனால் நேற்றைய தினம் இவர்கள் சில தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இது ஒரு கொலை என அவர்கள் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

கண்டெடுத்த 2 உடல்களில் ஒன்று ஆணினுடையதும், மற்றொன்று பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால், முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது. இக் கொலை எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர இருக்கிறது.

ad

ad