வேலணையில் ஈ.பி.டி.பியினரால் கடத்தி செல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்
யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடியைச் சேர்ந்த 34வயதுடைய சதாசிவம் லோகேஸ்வரன் என்ற இளைஞர் நேற்று இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அவரது வீட்டுக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று அவரை அழைத்து சென்றனர் என்றும் அதன் பின்னர் அவரை காணவில்லை என லோகேஸ்வரனின் தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் எனவும், அண்மையில் அவர் ஈ,பி.டி.பியினரால் மிரட்டப்பட்டிருந்தார் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித்தலைவரும் யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான நிஷாந்தன் தெரிவித்துள்ளார்