புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012

ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருதை பெற்றார் சச்சின்(வீடியோ இணைப்பு)
உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரரான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.
இதற்கு அந்நாட்டு எம்.பி ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருது இன்று வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், அவுஸ்திரேலிய மந்திரி சிமோன் கிரியன் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.
இதன்மூலம் அவுஸ்திரேலியாவின் இந்த உயரிய விருது பெறும் 2வது இந்தியர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இந்த விருதினைப் பெற்றார்.
வலதுகை ஆட்டக்காரரான சச்சின் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15533 ஓட்டங்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
மொத்தம் 100 சதங்கள் அடித்து புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad