யாழ்.தேவி புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: 6 பேர் பலி
கொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்துடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹாவ -அம்பன்பொல -ரன்தெனிகம புகையிரத கடவையில் இன்று காலை 9.10 அளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களே இவ்வாறு பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த பாதசாரியொருவர் குருநாகலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.