புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


இலண்டனில் மாபெரும் உலகத்தமிழர் மாநாடு: தமிழ் மக்களின் ஆதரவினை வேண்டி நிற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை
சிங்கள பேரினவாத அரசுகளால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை' மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி பிரித்தானியாவில் மகாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
இம்மாநாடு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை இலண்டனில் மாபெரும் உலகத்தமிழர் மாநாடு ஒன்றினை பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்துள்ளது.
இம்மாநாடு தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்தது யாதெனில்
இதில் தாயக தமிழக மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல கலந்து கொள்கின்றன. தற்போதைய சர்வதேசச் சூழலில் இதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து முன்னெடுக்கப்படும் இந்நிகழ்விற்கு தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த ஆதரவினை வேண்டி நிற்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும். இலக்கினை அடையும்வரை உறுதியுடன் போராடுவோம் என பிரித்தானிய தமிழர் பேரவையினர் மக்களிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். 
http://www.britishtamilsforum.com
http://tamilsforum.co.uk/
இலண்டனில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழர் மகாநாட்டுக்கு நிதிப் பங்களிப்பு

ad

ad