புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன
கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.
 

இங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் 'நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள்" மற்றும் 'முள்ளிவாய்க்கால் படுகொலைகள்" போன்ற வாசகங்கள் இதில் காணப்பட்டன.

இதேவேளை, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த தகவலை அறிந்த படையினரும் பொலிசாரும் அப்பகுதிக்குச் சென்று அவற்றை அகற்றியுள்ளனர்.

ad

ad