புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


இலங்கை அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்த பிரித்தானியா, இலங்கை அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதித்துறைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரித்தானிய பிரதிநிதி சுட்டிக்காட்டி, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறைச் சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தண்டனை விதிக்கும் பொறிமுறைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாது எனவும், யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் கோரியுள்ளது.
கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என மேலும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ad

ad