புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012


செட்டியார் தெருவில் பதற்றம்
 
ம்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில்புரிந்து வந்த சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செட்டியார் தெருவில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்
VEERAKESARI



கொழும்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில்புரிந்து வந்த சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செட்டியார் தெருவில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

செட்டியார் தெருவுக்கு தொழிலுக்காகச் சென்ற இவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் நானுஓய பங்களாவத்தை பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து செட்டியார் தெரு வர்த்தகர்களிடையே பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

ad

ad