புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012


சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்
சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. 
 

இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்தவர் பண்டிட் ரவி சங்கர். இந்திய இசையின் தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர். கிழக்கத்திய மேற்கத்திய இசைகளுக்கு பாலமாக விளங்கியவர். இந்திய இசைக் கலையை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் முக்கியமான பங்கை வகித்துள்ளார். தனது இறுதிக் காலம் வரை சுறுசுறுப்பான, அதே சமயம் தொய்வில்லாத இசையை வழங்கி வந்திருக்கிறார்.
1920ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி வாரணாசியில் பிறந்தவர் ரவி சங்கர். ரபீந்த்ரோ ஷங்கர் சௌதுரி என்ற பெயர் கொண்டவர். பின்னாளில் பண்டிட் என சிறப்புப் பட்டம் பெற்றார்.









 
 
 

சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. 
 

இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்தவர் பண்டிட் ரவி சங்கர். இந்திய இசையின் தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர். கிழக்கத்திய மேற்கத்திய இசைகளுக்கு பாலமாக விளங்கியவர். இந்திய இசைக் கலையை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் முக்கியமான பங்கை வகித்துள்ளார். தனது இறுதிக் காலம் வரை சுறுசுறுப்பான, அதே சமயம் தொய்வில்லாத இசையை வழங்கி வந்திருக்கிறார்.
1920ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி வாரணாசியில் பிறந்தவர் ரவி சங்கர். ரபீந்த்ரோ ஷங்கர் சௌதுரி என்ற பெயர் கொண்டவர். பின்னாளில் பண்டிட் என சிறப்புப் பட்டம் பெற்றார்.
 



ad

ad