புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


மன்னாரில் பாடசாலை சீருடையுடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் இன்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4 இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவருதாவது,
மன்னாரைச் சேர்ந்த முகம்மது சதாத் என்ற முஸ்ஸிம் இளைஞர் பல்வேறு பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விடுதலை செய்யப்பட்டவர்.
இவரினால் சுமார் 7 இற்கும் மேற்பட்ட யுவதிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த நபரும், மேலும் 3 நபர்களும் இணைந்து பாடசாலை மாணவி ஒருவரை ஏமாற்றி இன்று மதியம் பாடசாலை சீருடையுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மடு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு குறித்த சிறுமி மயக்கமடைய செய்த பின் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் மடு பொலிஸாருக்கு தெரிந்த நிலையில், மடு பொலிஸார் அனைவரையும் கைது செய்து இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் மன்னார் பொலிஸார் குறித்த மாணவியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. குறித்த மாணவி மயக்கமடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்திலேயே காணப்பட்டுள்ளார்.
அதன்பின் குறித்த பிரச்சினையை மூடி மறைக்க மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகம்மது சதாத் என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். சுமார் 3 இலட்சம் ரூபாய் வரை பணம் கேட்கப்பட்டுள்ளது.
ஒரு உடன்பாட்டின் பின் குறித்த நபரை விடுதலை செய்ய நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் பொலிஸ் நிலையததில் வைத்து அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பின் குறித்த மாணவி இரவு 9.30 மணியளவிலேயே மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியையும், அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

ad

ad