புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012



புனேவில் நடந்த முதல் "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 5 விக்‌கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 2 "டுவென்டி-20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலந்து வென்றது. இரு அணிகள் பங்கேற்கும் முதல் "டுவென்டி-20 போட்டி புனேவில் இன்று நடக்கிறது. இதில் "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பீல்டிங் தேர்வு செய்தார்.இங்கிலாந்து அணிக்கு லம்ப் (1) ஏமாற்றினார். லூக் ரைட் (34) ஓரளவு கைகொடுத்தார். எதிர்முனையில் அதிரடியாக ஆடிய ஹேல்ஸ் (56) 4வது அரைசதம் கடந்தார். பின் வந்த கேப்டன் மார்கன் (5) நிலைக்கவில்லை. படேல் (24), பிரஸ்னன் "டக் அவுட்டானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் யுவராஜ் சிங் (3) விக்கெட், டிண்டா 2, அஷ்வின் 1 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்தியா அதிரடியாக துவக்கியது. பின்னர் 5 ஓவர்கள் இருந்த போதே 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் தடுமாறியது. தொடர்ந்து நிதானமாக ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக யுவராஜ்சிங் 38 ரன்களும், ரெய்னா 26 ரன்கள் எடுத்தனர். இந்த தொடரில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ad

ad