புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

மணமகன் கொலை: மனைவியுடன் தொடர்பு என்பதால் நண்பன் வெறிச்செயல்?
செய்யாறு அடுத்த செய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்பூருக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.



 
இந்த நிலையில் மணமகன் சிவக்குமாரை கொலை செய்துவிட்டதாக வாலாஜாவை சேர்ந்த அரவிந்தன், சிவசங்கரன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  

கொலை செய்யப்பட்ட சிவக்குமாருக்கு அரவிந்தன், சிவசங்கரன், நண்பர்கள் ஆவார்கள். அரவிந்தனின் மனைவியுடன் சிவக்குமாருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதை அறிந்த அரவிந்தன் நண்பர் சிவசங்கரன் உதவியுடன் சிவக்குமாரை கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சிவக்குமார் உடலை வாலாஜா அடுத்த வன்னிவேல் உள்ள பாலாற்றிடில் புதைத்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. அரவித்தன், சிவசங்கரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து சிவக்குமார் உடல் புதைக்கப்பட்டதாக கூறபடும் வன்னிவேடு பாலாற்று பகுதிக்கு 2 பேரையும் அழைத்து சென்று உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் சிவக்குமாரை எப்படி கொலை செய்தார்கள் எதற்காக கொன்றனர் என்றும் விசாரணை நடத்துகிறார்கள்.

ad

ad