புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012

இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் தட்டிவிட்ட பந்தை ருபிந்தர்பால் சிங் தடுக்க
தவறினார். பந்து நியூசிலாந்து கோல் போஸ்ட்டுக்குள் செல்ல, அது "சேம் சைடு' கோலானது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 10வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு குர்விந்தர் சிங் சாண்டி (14வது நிமிடம்), ரகுநாத் (25வது) தலா ஒரு கோல் அடித்தனர். நியூசிலாந்து அணிக்கு 37வது நிமிடத்தில் நிக்கோலஸ் வில்சன் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-2 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. 65வது நிமிடத்தில் இந்திய வீரர் தனிஷ் முஷ்தபா ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய நியூசிலாந்து வீரர்களால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ad

ad