புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுகோள்:
நடிகர் ரஜினிக்குஅன்புமணி ராமதாசு பாராட்டு

பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 63ஆவது பிறந்த நாள் விழா 13.12.2012 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரியுள்ளார்.

பல லட்சக்கணக்கான இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் அவர்களின் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதே பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய நண்பர் ரஜினிகாந்த், முன்பு அவர் ''பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "அவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாடு ஒரு மிகப்பெரிய கேடாகும். இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். இந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் புகைபிடிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு சிறுவர்கள் புகையிலைத் தீமைக்கு அடிமையாகும் போக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் '2000 ஆம் ஆண்டில் பள்ளிக்குழந்தைகளில் 7 சதவீதத்தினர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினர். இதுவே 2009 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக அதிகரித்துவிட்டது' என்று தெரியவந்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைபிடிக்கும் காட்சிகளும் ஒரு காரணமாக உள்ளன. சிகரெட் நிறுவனங்கள் திரைப்படங்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை திணித்து வருகின்றன. உரிய வயதாகும் முன்பே இறந்து போகும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டவே சிகரெட் நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர். இப்பேராபத்து உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
இந்த சூழலில் நண்பர் ரஜினிகாந்த் "புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்" என்று ரசிகர்களுக்கு துணிச்சலாக வேண்டுகோள் விடுத்துள்ளதை மனமார வரவேற்கிறேன். அவரது இந்த முன் உதாரணத்தை தமிழ்நாட்டின் மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

தமிழ் திரைப்பட நடிகர்களில் கமலஹாசன், சூர்யா, விஜய், விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அவர்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுடைய வழியில் புகையிலைத் தீமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் முன்வர வேண்டும். மேலும் திரைப்படங்களில் தொடர்ந்து புகைபிடிக்கும் காட்சிகளில் இப்போதும் நடித்துவரும் மற்ற நடிகர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.
'மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். முதலில் பெற்றோரைக் கவனிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்' என்று நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிக உயர்வான கருத்துகளாகும். இதே கருத்துகளைத்தான் எங்களது நிறுவனர்மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என குறிப்பிட விரும்புகிறேன்.
இளைஞர்கள் மதுபானத்திற்கும் புகையிலைக்கும் அடிமையாகக் கூடாது. இளம்வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பம் வேலைக்கு பின்னர்தான் அரசியல் என வலியுறுத்தும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
இந்த தருணத்தில், தமிழ் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை நலமாக அமைக்கும் வகையில் புகையிலை மற்றும் மதுபானத் தீமைகளுக்கு எதிராக நண்பர் ரஜினிகாந்த் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கிறேன். இந்த உன்னதமான நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியும் பாட்டாளி இளைஞர் சங்கமும் அவருக்கு துணையாக நின்று தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் வளமாக அமைய பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கோள்கிறேன்.

இதே போன்று, தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து, நாட்டின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் கொடூரமான மதுபான பழக்கத்திற்கு எதிராக மற்ற நடிகர்களும், நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களும் குரல் கொடுக்க, போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்றென்றும் நலமோடு வாழவேண்டும் என எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ad

ad