புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2012


கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில்அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாகவும்,மாணவர்களது உரிமைகளில் இராணுவம் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்துவதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது ஆசியாவின் ஆச்சரியம் என்பது அடக்குமுறை தானா? அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களை தாக்கியதேன்?, மாணவர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்காதே?, மாணவிகளின் விடுதிகளுக்கு இராணுவம் வேண்டாம் என்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad