புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012


மூன்றுமுறை சொகுசு வாகனம் வாங்கிய யாழ். மாநகர மேயர்?- பொதுமக்களின் பல லட்சம் ரூபாய் நாசம்
யாழ். மாநகர சபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, தனது கணவரால் இடித்து சேதமாக்கப்பட்ட தனது சொகுசு வாகனச் செலவிற்காக யாழ். மாநகர சபையிடமிருந்து 40 லட்சம் ரூபா பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மாநகர சபை மேயரின் வாகனம் இரண்டுதடவைகள் விபத்திற்குள்ளாகின. இதில் முதலாவது தடவை மேயரின் கணவர், தனது தனிப்பட்ட தேவைக்காக வாகனத்தைக் கொண்டு சென்றபோது விபத்திற்குள்ளாகியது.
இதன்போது வாகனம் மீள்பாவனைக்கு உதவாததாக மாறியது. இதனால் காப்புறுதி நிறுவனம் 55 லட்சம் ரூபாபணத்தை வழங்கியது. மாநகர சபையிலிருந்து 9 லட்சம் ரூபா மக்களின் வரிப் பணம் பெறப்பட்டுள்ளது.
இப் புதியவாகனமும் விபத்திற்குள்ளாகியது. இதன்போது ஆறு மாதகாலம் மேயர் வாடகை வாகனத்தில் பிரயாணம் செய்துள்ளார். இதற்காக மக்களின் பணம் 7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த வாகனம் திருத்தம் செய்யப்பட்டதற்கு 24 லட்சம் செலவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்களின் வரிப்பணத்தில் மூன்று தடவைகள் சொகுசு வாகனம் வாங்கிய பெருமையை யாழ்.மாநகர மேயர் பெற்றுள்ளார்.

ad

ad