புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012


கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தை குற்றம் சுமத்தி அமெரிக்கா மற்றுமொரு மனு! வீரவன்ஸ
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு மனுவை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்றும், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இம்மனு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரசன்ஸ தெரிவித்தார்.
இது தருஸ்மன் அறிக்கையைப் பார்க்கிலும் பாரதூரமாக அமையுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தவறான கருத்துக்களை சேகரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இறுதிக்கட்ட போரில் புலிகள் தலைவர் உட்பட முன்னணி உறுப்பினர்களைக் காப்பாற்ற செயற்படாமை,
அக்காலகட்டத்தில் பான் கீ மூனை இலங்கைக்கு தருவிக்க செயற்படாமை.
ஐ. நா. அமைதிப் படையின் சேவையைப் பெறாமை
போன்றவை ஐ.நா. கொழும்பு அலுவலகத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும்.
இது தொட்ர்பாக சர்வதேச விசாரணை ஒன்றையும் கோருவதற்கும் புதிய யோசனையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கும் புதிய பிரேரணையில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ad

ad