புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


யாழ்.பல்கலை​. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்​த்தை

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியுள்ளதாக
எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியூடாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பாக வினவியபோது, தமக்து இக்கைதுகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை எனக்கூறிய பொலிஸ்மா அதிபர், 5 நிமிடங்களின் பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கூறி 30 நிமிடங்களின் பின்னர் அழைப்பினை ஏற்படுத்தி கருத்துக்களை தெரிவித்ததாக இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்வின் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து பேசிய பொலிஸ்மா அதிபர், கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் தற்போது வவுனியா சிறைச்சாலையில் இருப்பதாகவும் அவர்களின் கைது தொடர்பான பற்றுச்சீட்டுக்கள் அம்மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர், பதில் துணைவேந்தர் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்தலைவரான பரந்தாமன் சபேஸ்குமாரையும் கைது செய்தவற்காக அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிசார் சென்றுள்ளர்.
எனினும் அங்கு அம்மாணவன் இல்லாத நிலையில் பெற்றோரை விசாரித்த பொலிசார் காலை 9 மணிக்குள் அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தவறின் உங்களை கைது செய்வோம் என பெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான இரா.சம்பந்தனின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ்மா அதிபர், இச்சம்பவம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
கார்த்திகை 27ம் திகதி இந்துக்களின் சமய நிகழ்வான கார்த்திகை விளக்கீடு தினம் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டதால் பல்கலைக்கழக மாவணர்களை இராணுவம் கைது செய்ய முடியாது.
இவ்வாறு கைது செய்ததன் மூலம் பாரிய மனித உரிமை மீறலை இராணுவம் மேற்கொண்டுள்ளதுடன், மதக்கோட்பாடுகளையும் அவமதித்துள்ளது.
மேலும் மாணவர்கள் விடுதிகளுக்குள் இராணுவத்தின் பிரசன்னம் இல்லாதிருந்தால் இவ்வாறானதொரு நிலை தோன்றியிராது எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad