புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2012


என் மீதும் வன்னியர்கள் மீதும் கலைஞருக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது
 என்பதை உணர முடிகிறது : ராமதாஸ்
திமுக தலைவர் கலைஞர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.



இது குறித்து விளக்கம் அளித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி என் மீதும் , பா.ம.க. மீதும் அவதூறு குற்றச்சாற்றுக்களை சுமத்தியிருக்கிறார். சாதிய அமைப்புக்களை திரட்டி, தலித்துகளுக்கு எதிராக அபாயகரமான அரசியல் செய்வதாகவும் , இதற்காக என் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தலித் சமுதாயத்தினருக்கு வழங்கபட்டுள்ள சில சட்ட உரிமைகளை அச்சமுதாயத்தில் உள்ள சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னையில் கடந்த 2ஆம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாதிக்கபட்ட சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் அனைத்து சமுதாயக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஏற்பாடு செய்தது. அப்போது, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், அதை தடுக்கும் வகையில் அந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஒரு சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள், தாங்கள் அநியாயமாக பழி வாங்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை சாதிய அரசியல் என்று கருணாநிதி முத்திரை குத்துவாரேயானால், என் மீதும் வன்னியர்கள் மீதும் கருணாநிதிக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
தருமபுரி நிகழ்வுகள் தொடர்பாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே, தமிழகத்தில் சமுதாய மோதல்களின் பின்னணியில் ஒரு திராவிடத்தலைவர் இருப்பதாக கூறியிருந்தேன். இப்போது பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக அழைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருப்பதன் மூலம் அந்தத் தலைவர் தாம் தான் என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டிக்கிறார்.
இப்போது நான் சாதி அரசியல் செய்வதாக கூறும் கருணாநிதி, 2001 சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து சாதித் தலைவர்களையும் இணைத்து அமைத்தக் கூட்டணிக்கு பெயர் என்ன? பச்சையான சாதிக் கூட்டணி தானே?
இப்போது பழிவாங்கலில் இருந்து காத்துக்கொள்வதற்காகச் சமுதாய அமைப்புக்களை நாங்கள் ஒருங்கிணைத்தால் அது சாதி அரசியலா?
அதேபோல் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், இன்னும் சில திராவிடக் கட்சித் தலைவர்களும் தலித்துகளுக்கு எதிராக மற்ற சமுதாயங்களை பா.ம.க. ஒருங்கிணைப்பதாகவும், காதல் மற்றும் கலப்பு திருமணங்களை எதிர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன.


இந்தக் குற்றச்சாற்றுகளை பா.ம.க. திட்டவட்டமாக மறுக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியோ அல்லது அனைத்து சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அமைப்புகளோ தாங்கள் தலித்துகளுக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல என்றும் காதல் நாடகத் திருமணங்கள் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும், வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் பழி வாங்கலையும் தான் எதிர்ப்பதாக கூறியுள்ளன.
* தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பணம் பறிக்கும் நோக்குடன் பணக்கார குடும்பத்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதையும், பின்னர் அந்த பெண்ணை திரும்ப ஒப்படைப்பதற்காக பெண்ணின் குடும்பத்தினருடன் பேரம் பேசுவதையும், கருணாநிதியும், மற்றக்கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா?
* நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் நாடகத் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. இதில், 32 இளம் பெண்களும்,  37 பெற்றோர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்க பட்டவர்களுக்கு இந்தக் கட்சிகள் வழங்கும் நீதி என்ன?
*  தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர் அவறுக்கத்தக்க வகையில் ஈவ் டீசிங் செய்வதையும், அதை தட்டிக் கேட்போர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரச்செய்வதையும் இந்தக் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா?
* தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை இந்தக் கட்சிகள் ஒப்புக்கொள்கின்றனவா..... இல்லையா?
தடா, பொடா சட்டங்களை எதிர்த்த கட்சிகள், தலித் புகார் அளித்தாலே, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் கொடிய வன் கொடுமை சட்டத்தை எதிர்க்காதது ஏன்? இதன் நோக்கம் தலித்துகளின் வாக்குகளை வாங்குவதாக இருந்தால் அதற்கு பெயர் சாதி அரசியல் அல்லாமல் வேறு என்ன?
தருமபுரி சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பிய கட்சிகள் இந்த நிகழ்வுகள் குறித்தும் உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பி உண்மை நிலையை உலகுக்கு தெரிவிக்கட்டும்.

அவ்வாறு செய்யாமல் பா.ம.க. மீதும், பிற பிற்படுத்தபட்ட, மிகவும் பிறபடுத்தபட்ட சமுதாயங்கள் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்புவோம் என்றால், இந்த சமுதாயத்தினரின் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று அறிவிக்கட்டும். இதற்கு கருணாநிதியும் மற்ற தலைவர்களும் தயாரா? என்று அறைகூவல் விடுக்கிறேன்’’ என்று

ad

ad