புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012



திருச்சி பொன்மலை பகுதி மற்றும் உறையூர் மலைக் கோட்டை ஏர்போர்ட் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நியமித்து உள்ளார். 
அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
 
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வுடன் திருச்சி மாநகராட்சி 7 மற்றும், 27 முதல் 32, 36, மற்றும் 61 முதல் 65 ஆகிய 13 வட்டங்களை உள்ளடக்கி பொன்மலை பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் பகுதி செயலாளராக கவுன்சிலர் பாஸ்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். மற்ற வட்ட நிர்வாகிகள் விபரம் வருமாறு:-
 
61-வது வட்டம் அவைத்தலைவர் திருஞானம், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ராஜேந்திரன்.
 
62-வது வட்டம் அவைத் தலைவர் பொன்னஞ்சான், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பெர்ணான் டோ,
 
63-வது வட்டம் அவைத்தலைவர் நவ நீதகிருஷ்ணன், செயலாளர் தண்டபாணி, பொருளாளர் ஜெம்புலிங்கம்.
 
64-வது வட்டம் அவைத் தலைவர் அமிர்தலிங்கம் செயலாளர் ராஜ சிவக்குமார், பொருளாளர் கலர்பசீர், அவைத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சாமிநாதன்.
 
இதுதவிர ஒவ்வொரு வட்டத்துக்கும் 2 துணை செயலாளர்கள் ஒரு இணைச் செயலாளர், 3 மேலமைப் பிரநிதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 
இதுதவிர மலைக்கோட்டை பகுதி 8-வது வட்ட பொருளாளர் ராமர் 9-வது வட்ட பொருளாளர் முருகன், 10-வது வட்ட துணைச் செயலாளராக மகேஸ்வரி, 11-வது மேலமைப்பு பிரதிநிதியாக கல்யாணி, 12-வது வட்ட துணை செயலாளராக அரிகிருஷ்ணன், 15-வது வட்ட இணைச் செயலாளராக பழனியம்மாள், 17-வது வட்ட இணைச் செயலாளராக சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
ஏர்போர்ட் பகுதி 24-வது வட்ட பொருளாளர் தர்மராஜ், 34-வது வட்ட அவைத்தலைவர் மண்ணைராஜ்.
 
உறையூர் பகுதி  56-வது வட்ட துணை செயலாளராக பழனிச்சாமி.
 
ஜங்சன் பகுதி பொருளாளராக யாக்கோபு, 41-வது வட்ட அமைப்பு பிரதிநிதியாக ரெஜிஸ் குழந்தை சுந்தரம்.
 
பொன்மலை பகுதி 31-வது வட்ட இணைச் செயலாளர் மாரிக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ad

ad