புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012


இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
திருச்சி, சாஸ்தா நகரை ( திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரையொட்டிய சாஸ்தா நகர்) சேர்ந்த இலங்கைத் தமிழரான சிவசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். 

கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் மகன் வெளியில் சென்றிருந்தவேளை திடீரென்று வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
தீ பிடித்த உடலோடு அவர் தெருவில் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முன்பு அவர் உடல் கருகி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் பொலிசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் மனைவி வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கை தமிழர் நடு ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ad

ad