புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


தமிழ் நாட்டில் மேலும் மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் நான்கு பேர், கடந்த புதன்; கிழமை தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த மூன்று பேருள் ஒருவர், மதுரையில் இருப்பதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும்
காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழகத்தின் விசாரணைப் பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அவர்களுக்கான வெடிபொருள் தயாரிப்பு மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad