நெல்லை : காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வெட்டிக் கொலை
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரேமா. இவர் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் காதலித்து வந்தார். தனது காதலை பலமுறை அவரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது காதலை பிரேமா ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிரேமாவை சந்தித்த மணிகண்டன், மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். ஆனால் பிரேமா சம்மதிக்கவில்லை. பலமுறை வற்புறுத்தியும் கேட்காததால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேமாவை சரமாரியாக வெட்டினார்.
இந்நிலையில், இன்று பிரேமாவை சந்தித்த மணிகண்டன், மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். ஆனால் பிரேமா சம்மதிக்கவில்லை. பலமுறை வற்புறுத்தியும் கேட்காததால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேமாவை சரமாரியாக வெட்டினார்.
இதை தடுக்க முயன்ற அவரது தந்தை பெரியசாமிக்கும் வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலில் பிரேமா துடிதுடித்து இறந்தார். பெரியசாமி பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது