புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2012


ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. 


இந்திய வரலாற்றில் இசைக்கான ஆஸ்கர் விருது பெற்ற பின் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக நடத்தும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவரது இசையை ரசிக்க பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டி ருந்தனர்.
உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நடந்த இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது கம்பீரக் குரலில் பாடல்கள் பாடி அசத்தி னார். அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் எழுந்து ஆட்டம் போட்டனர். பெண் இசைக் கலைஞர்கள் உட்பட பல வெளிநாட்டு இசை வல்லுனர்கள் இசைக்கருவிகளை இயக் கியது நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகேற்றியது.
இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை மூலம் வரும் வருவா யில் 10 விழுக்காட்டினை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க ஜெயா தொலைக்காட்சி குழுமம் திட்ட மிட்டுள்ளது.

ad

ad