யாழ்.பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். வீட்டில்படித்துக்கொண்டிருந்த மாணவியே
மர்மனான முறையில்மரணமடைந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நடராசா கியானி என்ற பல்கலை மாணவி இன்று தனது இல்லத்தில் படித்துக்கொண்டிருந்திருந்தார்.அந்த நேரம் அவரது பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு வீடுதிரும்பி வருகையில் மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையிலேயே மரணித்துள்ளார்.
யாழ்.பல்கலையில் தற்போது அசாதாரண நிலமை காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு பல்கலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.பல்கலையில் தற்போது அசாதாரண நிலமை காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு பல்கலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.