மன்னார் ஆயர் ராயப்பு யோசப் மீது சிஐடியினர் விசாரணை
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம்
மன்னார் ஆயரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வது இது முதல் தடவையல்ல.
அவுஸ்திரேலியாவிலிருந்து அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து 600 புகலிடக் கோரிக்கையாளர்கள் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.