புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


அவதூறு வழக்கு:விஜயகாந்த் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.
விருதுநகரில் 3.8.11-ம் தேதி பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும் போது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.மங்களசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 
வழக்கை புதன்கிழமை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த் வழக்கு விசாரணைக்கு 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

ad

ad