புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது கனவிலும் கூட நடக்காது! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படும் என மாணவ்ர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது.
எனவே விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை என அவர்களை சந்திக்கப் போகும் போது எடுத்துக் கூறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad