புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012


பா.ஜ.க. மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தேர்வு
பாரதீய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு தேர்தல் பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் 28.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக காலையில் செயற்குழு கூட்டமும், பிற்பகலில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்க

ளின் பட்டியலை தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக தேர்தல் அதிகாரியுமான பண்டாருதத்தாத்ரேயா அறிவித்தார். 

இதில் திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 33 மாவட்ட தலைவர்கள், 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
மாநில தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பண்டாருதத்தாத்ரேயா அறிவித்தார். இவர் இரண்டாவது முறையாக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ad

ad