புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு. கள்ள காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை 11 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவி.மும்பையில் பரபரப்பு.

மும்பையில் கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது கணவரை ஆள் வைத்து கொன்று உடலை 11 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டிட்வாலா பகுதியைச் சேர்ந்தவர் மெகதார்(31). பால் வியாபாரி. அவர் தனது இரண்டாவது மனைவி ஆதித்யாவுடன்(29) வசித்து வந்தார். இந்நிலையில் ஆதித்யாவுக்கும் தனது கணவரின் சகோதரர் பாரதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மெகதார் மனைவியை கண்டித்துள்ளார்.

கள்ள காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை
உடனே ஆதித்யா தனது கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து மெகதாரை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி ஒரு சாக்குப்பையில் போட்டு அப்பகுதியில் உள்ள கோவில் அருகே போட்டுவிட்டனர். ஏதோ சாக்குமூட்டை கோவில் அருகே கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து மூட்டையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தியபோது தான் இறந்தவர் மெகதார் என்றும், கள்ளத்தொடர்பால் மனைவியே ஆள் வைத்து கொன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஆதித்யாவை கைது செய்தனர்.

இது குறித்து டிட்வாலா இன்ஸ்பெக்டர் ராஜேந்திர நாயக் கூறுகையில்,

மெகதாரை கயிறால் கழுத்தை இறுக்கியும், முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி சாக்குப்பையில் போட்டு கோவில் அருகே வீசிவிட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய பிறரையும் தேடி வருகிறோம் என்றார்
 

ad

ad