புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2012


கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழ்ப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.மஹரகம பிலியந்தல லும்பினி ஒழுங்கையிலுள்ள வீட்டிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட பெண் தாயுடன் வசித்து வந்ததார். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி நேற்றுமுன்தினமே மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். பெண்ணின் தாயாருடன் அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அயலவர்கள் அவதானித்துள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இரவு வேலை முடித்துவிட்டு பெண் நேற்றுக் காலை வீட்டுக்குச் சென்ற போது தாய் வேலைக்கு சென்றுவிட்டார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த கணவர், பெண்ணுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இதனை அயலவர்கள் பெண்ணின் தாய்க்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாகவே தயார் வீட்டில் வந்து பார்த்தபோது மகள் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்கிறது பொலிஸ்.
இந்தக் கொலையுடன் குறித்த பெண்ணின் கணவர் தொடர்புப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரைத் தேடிவருகின்றன

ad

ad