புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


என்னிடம் கேட்காதீர். செய்தியும் போடாதீர்! வைகோ ஆவேசம்!

மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், 04.12.2012 அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளராக ஆனார்.
கடந்த சில நாட்களாக இருவருக்கும் உள்ள மனகசப்பு பற்றி வைகோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மதுரையில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வைகோ இன்று (05.12.2012) வந்தார். அப்போது செய்தியாளர்கள் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த வைகோ, என்னிடம் கேட்காதீர்கள். செய்தியும் போடாதீர்கள் என்றார்.

வைகோவுடன் காரில் உடனிருந்தவர்கள், நாஞ்சில் சம்பத்தை பற்றி கேட்டு அவரை பெரிய ஆளாக்காதீர்கள். அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினர்.

ad

ad