இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய கடைசி வெள்ளியான நேற்று, அனைத்து நிறுவங்களிலும் போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. அந்த பணத்தை வாங்கிய பலர், குடித்துவிட்டு சாலைகளில் ஆட்டம் போட்டனர். இதில் சில ரெளடிகளும் அடங்குவர். குடிபோதையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால், பலருடைய முகங்களில் ரத்தம் வழிந்து ஓடியது. இளம்பெண்கள் பலர் அரைகுறை ஆடையுடன் சாலைகளின் நடுவில் போதையில் தள்ளாடினர். அவர்களை காவல்துறையினர் மீட்டு, பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலைகளில் வன்முறையில் இறங்கிய குடிகாரர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், பல அலுவலகங்களில் மதுபான பார்ட்டி நடந்தது. போனஸ் பணம் கையில் இருந்த காரணத்தால், கண்மூடித்தனமாக குடித்த ஆண்களும் பெண்களும் தள்ளாடியபடி, சாலையின் நடுவில் வாந்தி எடுப்பதும், கடைகளின் கதவு அருகே சிறுநீர் கழிப்பதுமான அறுவருப்பான செயல்களை செய்தனர். இரவு முழுவதும் தூங்காமல் காவல்துறையினர் நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடவேண்டிய கிறிஸ்துமஸ் விழாவை குடிபோதையில் நிதானம் இல்லாத இருந்த பலரைப் பர்த்து பரிதாபடுவதை தவிர வேறு வழியில்லை.