புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



10 வயது மகளிடம் பாலியல் கொடுமை!
கணவனை உலக்கையால் தாக்கி 
கத்தியால் குத்திக் கொன்ற மனைவி!
 ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் அருகே உள்ள துவாரகா நகரைச் சேர்ந்தவர் சுப்பராயுடு, இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இவர்களுக்கு ஒரு மகனும், 10 வயது மகளும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.


 



சுப்புராயுடுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். குடும்பத்தையும் கவனிப்பது இல்லை. இதனால் வெங்கடேஸ் வரம்மா அங்குள்ள அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் வேலைபார்த்து குழந்தைகளை கவனித்து வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளும் தாயுடன் அட்டைபெட்டி கம்பெனிக்கு வேலைக்கு செல்வது உண்டு.

சம்பவத்தன்று இரவு சப்பராயுடு வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்த மகளை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகளின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே சமையல் செய்து கொண்டு இருந்த வெங்கடேஸ்வரம்மா கணவரை அடித்து விரட்டினார்.

நள்ளிரவு அனைவரும் தூங்கியபோது வீட்டுக்கு வந்த சுப்பராயுடு மகளிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரம்மா உலக்கையால் கணவரின் தலையில் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராமல் கத்தியால் கணவரை சரமாரியாக குத்தினார். இதில் சுப்பராயுடு பரிதாபமாக இறந்தார்.

அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள் தவிர யாரும் தடுக்கவில்லை. பின்னர் வெங்கடேஸ்வரம்மா தன்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு கண்ணீருடன் ஊரை விட்டு வெளியேறினார்.

இந்த கொலை குறித்து பொதட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
.

ad

ad