புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 3 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ஒட்டங்கள் எடுத்தது.
ஆட்டமிழக்காமல் அணித்தலைவர் ஜெயவர்த்தன 61 ஓட்டங்களும், திஸ்ஸர பெரேரா 35 ஓட்டங்களும், ஜீவன் மெண்டிஸ் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி 162 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடியது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டு 122 ஓட்டங்கள் இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 15 ஓவர் முடிவில் 119 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஜான் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும், அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக இலங்கையின் திஸ்ஸர பெரரா தெரிவானார்.

ad

ad