புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013


கோர்ட் வளாகத்தில் காதலன் கண் முன்னே காதலியின் கழுத்தறுத்த நபர் கைது 
 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவுக்குட்பட்ட மெதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகள் நந்தினி(22). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், கும்மிடிபூண்டி தாலுகா, அயநல்லூர் பகுதியை
சேர்ந்த சேகர் என்பவரது மகன் பிரவீன் (25) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நேற்று பதிவு திருமணம் செய்ய முடிவு செய்து, பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இதனையறிந்த அவர்களது பெற்றோர்கள் வந்தனர். இதனை பார்த்த ஜோடி, தப்பி சென்றனர். இந்நிலையில், இன்று ஊத்துக் கோட்டை கோர்ட் வளாகத்தில் , இரு தரப்பு பெற்றோர் களும் வக்கீல் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட் டனர். அப்போது, நந்தினி, பிரவீணை தான் திருமணம் செய் வேன் என்பதில் உறுதியாக இருந்தார். 
இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் தாய்மாமன் ரவி என்ப வர், மறைத்து வைத்திருந்த கத்தியால், நந்தினியின் கழுத்தை அறுத்தார்.

இதில் படுகாயமடைந்த நந்தினி, ஊத்துக்கோட்டை மருத்துவ மனையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச் சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad