புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2013



3 குழந்தைகள் உயிரிழப்பு! பெற்றோர்களும் தற்கொலையா என போலீசார் விசாரணை! விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் அருகே பனப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சத்யா, சங்கீதா, தியாகராஜன் ஆகிய 3 குழந்தைகளின் சடலம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உயிரிழந்தவர்களின் பெற்றோர் முருகன், சிவகாமி ஆகியோர் காணாமல் போனதாகவும், அவர்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரவாண்டி போலீசார் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வறுமையின் காரணமாக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு அவர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்
பை ஏற்படுத்தியுள்ளது. 

ad

ad