கோவா: சோதனை என்ற பெயரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது – சஸ்பெண்ட்
இதை நம்ப மறுத்த அவர் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, எல்லா அறைகளிலும் தேடினார். பெண் போலீசார் யாரையும் உடன் அழைத்து வராமல், என் உடலில் அவசியம் இல்லாமல் சோதனை நடத்தினார். தொடக்கூடாத இடங்களில் எல்லாம் கை வைத்து அவர் என்னை மானபங்கப்படுத்தினார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
வடக்கு பனாஜி மாவட்ட சூப்பிரண்ட்டு இந்த மனுவின் மீது விசாரணை நடத்தியபோது, அந்த பெண்ணின் வீட்டை சோதனையிடுவதற்கு தேவையான எந்த புகாரும் போலீஸ் நிலையத்தில் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, காண்ஸ்டபிள் பிரஷாந்த் தவாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து சூப்பிரண்ட் உத்தரவிட்டுள்ளார்.