புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


தாழமுக்கம் வலுவிழந்தது: காற்றுடன் மழை தொடரும்

60 கி.மீ. வேகத்தில் காற்று, கடல் கொந்தளிப்பாக இருக்கும்; மட்டு உறுகாமத்தில் கூடுதல் மழை
இலங்கைக்கு அருகே 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு தென்கிழக்குப் பகுதியாக நகர்ந்து வங்காள விரிகுடாவில் செயலிழந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி சூரியகுமார் தெரி வித்தார்.
அதேநேரம் பருவப்பெயர்ச்சி காரணமாக நாடு முழுவதிலும், கடல் பிராந்தியங் களிலும் காற்று 60 கிலோமீற்றர் வேகத் தில் வீசும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டையிலிருந்து மாத்தறை வரையிலான கடற்பரப்பும், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடான புத்தளம் வரையான கடற்பரப்பும் கொந்தளிப்பாகக் காணப்படும். இக்கடற் பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடற்கொந்தளிப்புக் காரணமாக மட் டக்களப்பிலிருந்து புத்தளம் வரையிலான கரையோரப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நேற்று முற்பகல் 8.30 மணியுடன் மு

ad

ad