புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013



சேலம் :  9-ம் வகுப்பு மாணவியின் திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம் 
சேலம் தாதகாப்பட்டி செல்லக் குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மாது. இவர்களுக்கு மூங்கப்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு
படிக்கும் மகள் உள்ளார்.

நேற்று காலை மாணவிக்கும், அவரது தாய் மாமனும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி-லட்சுமி தம்பதிகளின் மகனுமான மாரியப்பனுக்கும் (30) திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது.
இதுகுறித்து கலெக்டர் மகரபூசணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை தாசில்தார் ஜாகீர் உசேன், சீலநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் சென்று இளம் வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். மீறி திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது

ad

ad